தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொறடாச்சேரி இரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கருடன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவலோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து இத்தலத்தில் உள்ள ஒரு புற்றின்மீது வைக்க, புற்றுக்குள் இருந்த சிவபெருமான் அந்தக் குடத்தை உள்ளே இழுத்துக் கொண்டார். கருடன் குடத்தைக் காணாமல் அந்தப் புற்றைக் கிளறியபோது சிவபெருமான் அவருக்குக் காட்சியருளிய தலம். |